பள்ளிக்கூடங்கள்-உயர்
பல்கலைகழகங்கள்
சிந்தனை கூடங்கள்
சிறப்பான பாலங்கள் கட்டியவனே!-உன்
கையைகொடு
வானாளாவிய கோபுரங்கள்!
கவின்மிகு கட்டிடங்கள்!
கலைமிகு கோவில்
கருவறைகள் கட்டியவனே!-உன்
கையைகொடு!
வண்ணப்பட்டாடைகள் வனப்புறு
வடிவங்களில் தோலாடைகள்
கதராடைகள் நல்ல
கைத்தறியில் தந்தவனே -உன்
கையைகொடு!
வாழும் உயிருக்கெல்லாம் -நல்
சோறும் நீரும் கொடுத்தவனே
கலைப்பை நீ பிடித்து உலகின்
பிழைப்பை நடத்துபவனே-உன்
கையைகொடு!
உணவும், உடையும் இருக்க
இடமும் படைத்து தந்தாய்
உனக்கு நாங்கள் தந்தது
எதுமில்லை அதனால்-உன்
கையைகொடு அதற்கொரு
முத்தம் தருகிறேன்!
- தியாகு (
நண்பா உன் கையைகொடு
More articles by தியாகு
- மண்ணுக்கேற்ற மார்க்சியம்: புரட்டா? புதுமையா? (16 பிப் 2026)
- மண்ணுக்கேற்ற மார்க்சியம்: புரட்டா? புதுமையா? (14 மே 2025)
- தமிழ்நாட்டைக் காக்கும் அரண் பெரியார்! (22 ஜன 2025)
- புதுமைத் தமிழ்ஒளி பொதுமைச் செவ்வொளி! (11 செப் 2024)
- மாரிமுத்து - மகாலட்சுமி ஆணவப் படுகொலை (18 அக் 2023)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.