செந்நீரைச்
செம்மொழியில் கரைத்து
தெளித்துவிட்டார்கள்.
உப்புக்கரித்தது.
தித்திக்கிறது
என்று
தீர்மானம் போட்டார்கள்
பனைமரத்தையும்
பக்கத்தில் நிறுத்தி.
ஏமாந்து விட்டதையும்
ஏமாற்றிவிட்டதையும்
மறைக்காமல்
ஆகாயத்தை நோக்கி
அலறியது பனை.
கருக்குகளை வெட்டி
பனை ஓலைகளை
எரித்து
ஒற்றைப் பனைமரத்தை
மொட்டைப் பனைமரமாக்கி
நிறுத்திவிட்டார்கள்
ராட்சதக் காற்றாடிகள்
போட்டிப்போடும்
புஞ்சைக்காட்டில்
தன்னந்தனியாக.
இன்னும் விழுந்துவிடவில்லை
மொட்டைப் பனைமரம்.
எப்போதாவது
தோட்டங்களுக்குள்
நுழைவதற்கும்
நிழல்களில் அமர்வதற்கும்
அனுமதி மறுக்கப்பட்ட
கறுப்பு மனிதர்கள்
வரக்கூடும்
மொட்டைப் பனைமரத்தின்
பட்டை நிழலில்
ஒதுங்கி இளைபாற.
- புதிய மாதவி, மும்பை (
மொட்டைப் பனைமரம்
- விவரங்கள்
- புதிய மாதவி
- பிரிவு: கவிதைகள்
More articles by புதிய மாதவி
- திராவிட இயக்கத்தின் கலை இலக்கிய பங்களிப்பு (22 பிப் 2021)
- சத்ரபதி சிவாஜியும் இந்துத்துவ அரசியலும் (23 செப் 2020)
- வரலாற்றில் திரிபுவாதங்களும் இந்துத்துவ அரசியலும் (01 ஏப் 2020)
- பரியேறும் பெருமாளும் சில வழக்குகளும் (25 பிப் 2019)
- யண்டு குண்டு அரசியல் முதல் இந்துத்துவ அரசியல் வரை - சிவசேனா அரசியலை முன்வைத்து... (16 ஆக 2018)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.