Beggingபிச்சைக்காரர்கள்..
பெரும்பாலும் நிறுத்தங்களிலேயே
பயணம் செய்பவர்கள்.

கடன் அன்பை முறிக்கும்
என்பதற்காகவே
கடன் வாங்கா கண்ணியக்காரர்கள்.

உள்ளே நாம்
அழைத்துப் போட்டால்
அடியார்கள்.
வெளியே நம்மை
அழைத்துக் கேட்டால்
பிச்சைக்காரர்கள்.
நாகரிகம் வளர்ந்தே இருக்கிறது

ஆடை கொண்ட
கூட்டிற்கு மரியாதையில்லை.
ஒன்றுமில்லா ஒட்டிற்கு
மரியாதை...
‘திரு’வோடு என்று!

சேரியில்
அறுவடை செய்ததை
மாளிகையில்
பரிமாறுகின்றனர்.

தேர்தலில் மட்டும்
தனித்தனியாகப் போடுகிறோம்
பிச்சையை!
ஒன்றாகத் தருகிறார்கள்
திருவோட்டை!


கதிர்மொழி

More articles by கதிர்மொழி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.