ஏழ்மையின் தவிப்புகளை
கூரைபிய்க்கும் அடைமழையிடம்
புரியவைக்க போராடுகிறது
சேரிச் சிறுமியின் முனகல்
சப்தம்..
அழிக்கப் பிறந்த மழைத்துளிகள்
வெள்ளமென பெருக்கெடுத்து
அழித்துப்போனது அவளின் ஓட்டுவீடு
கனவுகளை...
விடியலில் முள்செடியொன்றில்
காய்ந்துகொண்டிருந்தது அச்சிறுமியின்
சடலம்.
சொல்லமுடியாத வலிகளை
காற்றில் எழுதிப் பறக்கிறது
ஒற்றைக்குயிலொன்று.
இலையுதிர்காலத்தின்
கடைசி இலை சத்தமின்றி
மெதுவாய் உதிர்கிறது
சேரிச் சிறுமியின் கேட்கப்படாத
முனகலென.
- நிலாரசிகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- வேளாண் விளைபொருள்கள் விலைக்குச் சட்ட ஏற்பு வழங்கு!
- கலைஞர் நூற்றாண்டு: மறுவாசிப்பில் கலைஞரின் ‘நளாயினி'
- சனாதனம் குறித்த உயர்நீதிமன்றத்தின் முறையற்ற தீர்ப்பு!
- இறகுகளுக்காக ஒரு நூலகம்
- எதிர்மறை அலைகள்
- நான்
- பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்?
- தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி!
- ஆரிய மாடலும், திராவிட மாடலும்!
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!