எல்லாவற்றையும்
மறந்து விடு.
கடைசித்துளி ரத்தமும்
வடிந்த சவமாகு.

நினைவுகளின்
மென்பரப்பை
தீயிட்டுப்பொசுக்கு.

உறவுகளில்
உன்னதமென்று எதுவுமில்லை.

கணங்களில் நிகழ்கிற
ஸ்பரிசத்திற்காக
காலமாய் சுமக்காதே வேதனையை...

கருணை, அன்பு, தாய்மை
யாவற்றுக்கும் பின்னால்
புன்னகைக்கிறது
பணமென்னும் குரூரம்.

லட்சுமிகாந்தன்
Pin It