Boy in beachநினைவுகளை
வரிசைப்படுத்துகையில்
ஞாபகம் வருகிறது
குழந்தையில் தொலைந்துபோன
சம்பவம்.
அம்மாவும் அப்பாவும்
தேடித்தேடி
அலுத்துப்போனதில்
நான் கடற்கரையில்
மணல்வீடு கட்டுவதும்
அலைவந்து அதைக் கலைப்பதும்
மீண்டும் கட்டுவதும்
அலைவந்து கலைப்பதுமாய்
கவலையற்று
விளையாட்டில் ஈடுபட்ட அந்த
நாட்களை நினைவுபடுத்தி
குழந்தைப்பருவத்திற்கே
அழைத்துச் செல்கிறது
முன்னெப்போதோ
எழுதி வைத்து
இன்று வாசித்த கவிதை.


இலாகுபாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.