Speechபேசுவதற்கென யாருமின்றி
தனிமை காத்த வேளையில்
பேச்சுக்களின் தீவிரத்தை குறைப்பதற்காய்
யோசித்துப் பார்த்தேன்........
வெளியெங்கும் ஓயாத பேச்சுக்கள்
சலிப்பையே ஏற்படுத்தின மனமெங்கும்....
நண்பனுடன்,
அண்டை வீட்டானுடன்,
தெருக்கோடி நண்பர்களுடன்....
இப்படியாக....... நீண்டு .........
இறுதியில் குறைந்த
பேச்சுக்களின் எல்லை
முடிவிற்கு வந்தது.
மௌனமே எங்கும் வியாபிக்க
காலத்தின் போக்கில்
மௌனத்தின் அலறல்
பேச்சுக்களை விரும்பத் துவங்க
இப்போது பேசத் துவங்குகிறேன்
முன் எப்போதும் இல்லாத அளவு..... 

கா. ஆனந்தகுமார் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

More articles by கா.ஆனந்தகுமார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.