நிலத்தில் சிதறிக் கிடந்த
தானியத் துகளொன்றினை
ஊர்வலமாய் எடுத்து சென்றன எறும்புகள்
இடைமறித்துக் கடக்க முயன்றேன் நான்
தடைதனை அறிந்து பின்னர்
பயணித்தன வேறு பாதையொன்றில்
எனதுருவத்தின் அறிதல் ஏதுமின்றி
நீள்கிறது அதன் உலகம்
என் போன்ற குறுக்கீடுகளுடனும்
அதனதன் உலகம் அதற்கானது
- கா. ஆனந்தகுமார்
அதற்கானது......
- விவரங்கள்
- கா.ஆனந்தகுமார்
- பிரிவு: கவிதைகள்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.