Loveஎனக்குப் பிடிப்பதெல்லாம்
உனக்குப் பிடிப்பதில்லை
என்றாலும் பிடித்திருக்கிறது
உன்னை எனக்கு .

உனக்குப் பிடிப்பதெல்லாம்
எனக்குப் பிடிப்பதில்லை
என்றாலும் பிடித்திருக்கிறது
என்னை உனக்கு.

அவரவர்க்கு பிடித்தவற்றோடு
அனுதினமும் சதிராடி
நீர்க்கோல வாழ்வில் நிலைத்து
நெடும்பயணம் விழையும் மனது. 

- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It