நாடெதுவென்றபோதும்
நாணம்கொள்ளும்
பெண்கள் அழகு
என்றெல்லாம்
எழுதி வந்தவன்
ஹரிகதா காலாட்சேபம்
சீதாக் கல்யாணம் என்று
தம்பதி சமேதராய்
தரிசனம் தருவதும்
ஒன்பது மணி நேரமும்
அலுவலகத்தில்
ஓயாமல் பேசும் நண்பனை
மனையாள் குழந்தையோடு
மார்க்கெட் ஒன்றில்
மௌனமூர்த்தியாய்
காண நேர்வதும்
தொலைதூரக் கட்டண
தொலைபேசி அழைப்புகளில்
மாதந்தோறும் அரைமணிநேரம்
மறக்காமல் பேசும் நண்பன்
இருவரி பதில்களாய்
ஈமெயில் அனுப்பத்தொடங்குவதும்
ஆகக்கூடி
சக்திக்குள்ளே சிவமென்பது
சாத்தியம்தான் போல.
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (
சக்திக்குள்ளே சிவம்..
- விவரங்கள்
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
- பிரிவு: கவிதைகள்
More articles by செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
- கவிதையை முன்வைத்து... (13 ஏப் 2010)
- நாற்காலிகள்... (13 ஏப் 2010)
- சிறகடித்து... (13 ஏப் 2010)
- பேச்சுத்துணை.... (13 ஏப் 2010)
- இன்று... (13 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.