wifeநாடெதுவென்றபோதும்
நாணம்கொள்ளும்
பெண்கள் அழகு
என்றெல்லாம்
எழுதி வந்தவன்
ஹரிகதா காலாட்சேபம்
சீதாக் கல்யாணம் என்று
தம்பதி சமேதராய்
தரிசனம் தருவதும்

ஒன்பது மணி நேரமும்
அலுவலகத்தில்
ஓயாமல் பேசும் நண்பனை
மனையாள் குழந்தையோடு
மார்க்கெட் ஒன்றில்
மௌனமூர்த்தியாய்
காண நேர்வதும்

தொலைதூரக் கட்டண
தொலைபேசி அழைப்புகளில்
மாதந்தோறும் அரைமணிநேரம்
மறக்காமல் பேசும் நண்பன்
இருவரி பதில்களாய்
ஈமெயில் அனுப்பத்தொடங்குவதும்

ஆகக்கூடி

சக்திக்குள்ளே சிவமென்பது
சாத்தியம்தான் போல.

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.