தென்றலின் வழியே
More articles by கோகுலன்
- நானும் காதலும் – 5 (15 ஏப் 2010)
- ராஜன் ராஜீயான க(வி)தை (15 ஏப் 2010)
- ஏகாந்தம் திருடிப்போனவள் (13 ஏப் 2010)
- நானும் காதலும் - 4 (13 ஏப் 2010)
- நானும் காதலும் - 3 (13 ஏப் 2010)
நீயனுப்பும் அன்பின் செய்திகளில்
நனைந்துவரும் வண்ணத்துப்பூச்சி
என் வாசல் கடக்கும் தருணம்
அதன் பின்னோடிச் சென்று
செட்டை வருடுகிறேன்
விரல்களில் ஒட்டிக்கொள்கிறது
உன் நேசம்!
அதி குளிர் காலத்தின்
பனிபொழிந்த காலையொத்து
வெண்மை வெடித்துக் கிடக்கிற
இப் பாலைப் பருத்திக்காட்டின்
ஒரு மூலையில் நின்றபடி
உன் பெயரை உரக்கக் கூவுகிறேன்
மெல்லத்தவழும் மேற்காற்றில்
நிறைந்து மிதக்கின்றன
நம் காதலின் பிசிறுகள்!