எதிர்ப்படும் கேள்விகளுக்கான நம்
எதிர்வினைகள் என்னென்ன?
மற்றொரு கேள்வியை
மறுமொழியாய் தருவது.
கேள்விகளின் தரம் பற்றிய
கேள்விகளை முன்வைப்பது.
கிண்டல்கள் கேலிகள் என்று
கேள்விகளையே கேள்விக்கு உள்ளாக்குவது.
மௌனமான முகங்களால் கேள்விகளை
முற்றிலும் நிராகரிக்க முயல்வது.
வேறுவழியின்றி வெளிப்படும் நம்
விடைகளிலும் விளங்கத் தெரிவது
முன்வைக்கப்படும் கேள்விகளைப் பலரும்
முழுதாய் வாங்கிக்கொள்ளாததும்.
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (
முன்வைக்கப்படும் கேள்விகளை...
- விவரங்கள்
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
- பிரிவு: கவிதைகள்
More articles by செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
- கவிதையை முன்வைத்து... (13 ஏப் 2010)
- நாற்காலிகள்... (13 ஏப் 2010)
- சிறகடித்து... (13 ஏப் 2010)
- பேச்சுத்துணை.... (13 ஏப் 2010)
- இன்று... (13 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.