எல்லாம் முடிந்ததென நீ
மொழிபுரியாத தேசத்தின்
மலையின் அப்புறத்திலான
தனித்த வீட்டில் மீண்டும் ஏகினாய்
ஆர்ப்பரித்தபடியே
கைபற்றிவரும் குழந்தைபோலான
நேற்றைய நினைவுகளை
உதறி நடக்க எனக்குத் திராணியில்லை
நீ முதன்முதலாய் மீட்டிவிட்ட
என் நரம்பு மெல்லிசை பரப்பி
அதிர்ந்துகொண்டேயிருக்க
நினைவின் திசைகளிலெல்லாம்
பிரவாகமெடுக்கும்
உன் பிரியத்தின் கூறுகளை
ஒவ்வொன்றாய் அச்சுக்கோர்க்கிறேன்
இன்று உணர்வற்றுக்கிடப்பினும்
நாளைய உயிர்த்தெழலில்
நம்பிக்கை எனக்கு!
- கோகுலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...