எதற்கும்
More articles by செல்வராஜ் ஜெகதீசன்
- பத்திரமும் தைரியமும் (29 அக் 2010)
- பாதிப்பாதி (15 ஜூலை 2010)
- வாழ்வின் நிலைகளில் (21 ஜூன் 2010)
- பின் தொடரும் நிழல் (09 ஜூன் 2010)
- ஏற்புடையதாய்.. (15 ஏப் 2010)
நேரமில்லை
என்கிறாய்.
இரண்டு முறை
ஒரு படத்தைப்
பார்த்தேன்
என்கிறாய்.
எது குறித்தும்
எப்படியும்
எக்களிக்க
முயல்கிறாய்.
முழுதாய் பேசுவதற்குள்
மூக்கை மூக்கை
நுழைக்கிறாய்.
முன் அபிப்பிராயமின்றி
முழுதும் கேட்க
மறுக்கிறாய்.
எழுதிய கவிதை
எல்லாம்
எவளை வைத்து
என்கிறாய்.
எத்தனை
வருடங்களாய்
இப்படியே
இருக்கிறாய்.
இருந்தும்
இருக்கிறாய்
இன்னமும்
என்
நண்பனாய்.