ஆசையின் பொருட்டான
நகர்தலின் விதி
எதுவாகவும் இருக்கட்டும்.

உன்
அருகாமையற்ற பெறுதல்
யாதொன்றைக் கொடுத்து
சிறந்தாலும்
செயற்கை பூரித்தலைத் தவிர
செய்வது வேறொன்றுமில்லை
எனக்கு.

விட்டகல முடியாத
இத்துயரப் பாடின்
கேவலை
நீ அறிந்தும்
அனுப்புவதன்
பரிவை நினைத்து
வழியும் கண்ணீரைத் துடைத்து
கட்டியணைத்துக் கொள்
காணாது போகும்
துடிப்பில் இதயம்
லயம் கூடிக் கழிக்க.

- ரவி அல்லது

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.