சிரித்து மகிழ்கிறேன்
நீங்கள்
சிரித்துவிடுகிற பொழுதெல்லாம்.

பயம்
கொள்கிறேன்
நீங்கள்
கோவம் கொள்ளும்
பொழுதெல்லாம்.

பாசமென
அறிகிறேன்
நீங்கள்
பரிவு
காட்டும் பொழுதெல்லாம்.

கண்ணீர்
சிந்துகிறேன்
நீங்கள்
கரிசனங்களைக்
காணும் பொழுதெல்லாம்.

நம்பி விடுகிறேன்
யாவரும்
என்னைப் போலென
உலவும் முகங்கள்
ஒப்பனைகளில்
திரிகிறதென அறியாமல்.

- ரவி அல்லது

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.