உன்னிடம்
இல்லாத ஒன்றை
துறந்து விட்டேன்
என்பதைவிட
இருக்கும்
ஒவ்வொன்றையும் துறந்தால்
நீ புத்தன்.

புன்னகையும்
மௌனத்தையும்
தொலைக்க முடியாத
புத்தனிடம்
அதையே கேட்கிறது
அமைதியை விரும்பாத
இந்த உலகம்.

- ப.தனஞ்ஜெயன்

Pin It