மூன்று முறை நிராகரிக்கவிட்டு
முப்பது காசுக்கு காட்டிக் கொடுக்க விட்டு
தன் மரணத்தை
வரலாறாக்கிக் கொண்டார் Mr.X

*

வயல் வரப்போடு தனித்திருக்கிறேன்
வாய்க்காலோடு கசிகிறது
"வள்ளி வள்ளி என வந்தால்" பாடல்

*

சாமி பிடித்த மரங்களைப் போலவே
பேய் பிடித்த மரங்களையும்
ஒருவனும் வெட்டுவதில்லை

*

பூதக்கண்ணாடி வழியே
தெரிகிறது
தூரத்து சாமி சிலையும்

*

மூதாட்டி தலையில்
கூடை நிறைய மூப்பும்
கொஞ்சூண்டு கீரையும்

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.