என்னைப் பிணைத்து வைக்க
பேரன்பின் பெருவாக்கியங்கள்
தேவையில்லை...
அன்பின் சிற்றெழுத்துக்களே
போதுமானது எனத் தெரிந்தும்
நீயெனை நோக்கி
அலட்சியமாய் வீசும்
சிவப்பின் சொற்களையும்
சிதறாமல்
சேகரம் செய்கிறேன்
எனக்கான சிற்றெழுத்துக்களை
அவற்றுள் தேடிக்கொள்ள....

- அருணா சுப்ரமணியன்

Pin It