ஒற்றை யானை பிடிபடுகிறது
ஒற்றைப் புலி பிடிபடுகிறது
ஒற்றைக் கரடி பிடிபடுகிறது
ஒற்றைக் காட்டெருமை பிடிபடுகிறது
ஒற்றை மான் பிடிபடுகிறது
ஒற்றை சிறுத்தை பிடிபடுகிறது
இருந்த ஒற்றைக் காடும்
பிடிபட்டுவிட
பிடிபடாமலே மிச்சத்தையும்
அடித்துக் கவ்வி
விழுங்கிக் கொண்டிருக்கும்
பாசிசக் கும்பல்
ஒளிந்து கொண்டிருக்கிறது
அந்த
நாற்காலியின் மறைவில் ..

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.