அணுக்கமானவரின்
மரணத்தால் தோன்றும்
வெற்றிடத்தின் அழுத்தத்தில்
இதயம் சிந்தும்
குருதியின் வெம்மையில்
மனதின் வன்மெல்லிய
தன்முனைப்புத் திரை கரைய..
துலங்குகிறது
அகங்கார வஞ்சகங்களின்
பொருளின்மை..

அழுக்குகளைக்
கரைத்த கோடைமழை
நின்றவுடனேயே
படியத் தொடங்குகின்றன...
பச்சிளங் குழவியெனத் துலங்கும் ம(ன)ர இலைகளில்
கோடைப் புழுதிகள்

- கா.சிவா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.