தனியாக பேசிக் கொள்வது
நோவு
தான் மட்டுமே தானென்பது
தாகம்
தன்னையே சுரண்டுவது
சாவு
தானாகி தவித்துக் கிடப்பது
தவம்
மண் அள்ளித் தின்பது
சிறுபிள்ளை வாதம்
மரணம் சுரண்டிய ஜீவனம்
மானுட மயக்கம்
மின் மயான தகிப்பில் யாரோ
முனங்கிக் கிடக்கும் சொல்லொன்றில்
சாம்பல் நிற போதை
எதிரேயிருக்கும் சுடலை மாடசாமிக்கு...!

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.