பயண களைப்பில்
ஒரு பாம்பென நெளிந்துகொண்ட
பொழுதில்
உடல்முழுதும் விஷமென
ஏறிக்கொண்ட தனிமை
போதைகொண்டு தள்ளாடியது
நொடிகளின் தொடர்ச்சி
கேட்காத தூரத்தில் தூரலென நின்றது
ஏதேதோ எண்ண குவியல்கள்
சிறு நீர்குமிலென தேங்கிப்போனது
விழித்திரையெங்கும் தொடுதிரையாய்
பூத்துக்கொண்டதில்
தூக்கம் யாருக்கோ விற்றுப்போனது
திடுக்கென கேட்கும் யாரோ குரலொன்றில்
வடிந்துகொள்கிறது ஒட்டுமொத்த
ஏகாந்தமும்

- சன்மது

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.