ஏகாந்தத்தின் பெருவெளியில்
விளைந்து நிற்கிறது ஆப்பிள்

பறிப்பதற்கு நீளும் விரல்களை
ஒருபோதும் சீண்டியதில்லை மரம்

காக்கா கடிகடித்து
சுவைக்க சுவைக்க
அதிகரித்தபடி அதன் சுவை

வஞ்சத்தின் வெக்கையில்
உருகி வழிகிறது உறைபனி

சூழ்ச்சிகளின் வெடிப்புகளில் நிரம்புகிறது
மரணித்த மனிதத்தின் குருதி

- விஜயபாரதி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.