ஏதோ சொல்லத் துடிக்கிறது
இடம் பொருள் ஒவ்வா மனநிலை
ஒளித்து வைத்த உள்ளொன்று புறம் ஆகி மேய்கிறது
பேரழுகையோ பெரும் தவிப்போ
தேடலின் நுனியில் காட்டு வாசம்
தனித்த நடையில் தகிக்கும் மௌனம்
ஓடி ஓடி தொலைவது
கிடைப்பதற்கும்
கிடைத்து, திகைத்துப் பார்ப்பது தொலைவதற்கும்
சிறுவயதில் வீட்டை விட்டு ஓடிப் போன பெரியண்ணன் சாயல்
காட்டை விட்டு ஓடி ஓடி வரும் சின்னத்தம்பி யானைக்கு...

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.