பயம் சிலரை 

பூவிலேயே பற்றிக்கொள்கிறது. 

பூ பிஞ்சாகும்பொழுது 

பயம் புழுவாகிறது. 

 

பிஞ்சு காயாகும்பொழுது 

பயம் வண்டாகிறது 

காய் வளரும்பொழுது 

பய வண்டு 

சிறிது சிறிதாக 

கொஞ்சம் கொஞ்சமாக 

காயின் உள்சதையைக் 

குடைந்து தின்ன ஆரம்பிக்கிறது. 

காய் பழமாகும் 

சமயத்திலெல்லாம் பயவண்டு 

எதையும் 

விட்டுவைப்பதில்லை 

வெறும் மேற்தோலைத் தவிர 

உட்பகுதியை வெறும் 

ஓடாக்கி வைத்திருக்கிறது...

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.