நினைத்த நேரத்தில்
உன்னைக் காண முடிவதில்லை.

நினைத்த நேரத்தில்
உன் குரலைக் கேட்க முடிவதில்லை.

நினைத்த நேரத்தில்
உன் விரல்களோடு கைகோர்க்க முடிவதில்லை.

நினைத்த நேரத்தில்
உன்னை முத்தமிட முடிவதில்லை.

நினைத்த நேரத்தில் உன்னோடு சண்டை
போட முடிவதில்லை.

நினைத்த நேரத்தில்
உன்னைப் பிரிந்து
செல்ல முடிவதில்லை.

பாலத்திற்கு அடியில்
ஓடும் தண்ணீரைப் போல
நினைவுகளின்
அடியில்
வாழ்க்கை
நழுவிச் சென்று கொண்டிருக்கிறது.

- அமீர் அப்பாஸ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.