பிழை திருத்தம் 


தொல்காப்பியத்தில்
பிழை திருத்தம்
திணைகள் ஆறு
கொய்தல் திணை
முள்ளும்... முள்வேலி சார்ந்த இடமும். 

புறநானூற்றில்
பிழைதிருத்தம்
‘யாதும் ஊரே’
சிங்களம் தவிர...
‘யாவரும் கேளிர்’
சிங்களனைத் தவிர...

முரண் 

இந்திய விடுதலைப் போருக்கும்
ஈழ விடுதலைப் போருக்கும்
சிறு வேறுபாடுதான்
இந்திய விடுதலைப் போரில்
தமிழன் இந்தியனாகி மடிந்தான்
ஈழப் போரினால்
இந்தியன் தமிழனாக மலர்ந்தான்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.