எழுந்ததும் தேநீர் தருகையில்
9 மணிக்கு இட்லி தருகையில்
இடைவேளை தேனீர் தருகையில்
மதியம் ஆட்டுக்கறி குழம்பில்
சோறு தருகையில்
பின் மாலை தேநீர் தருகையில்
இரவுணவுக்கு தோசை தருகையில்
இடையிடையே வீடு பெருக்குகையில்
துணி துவக்கையில்
ஒட்டடை அடிக்கையில்
துணி அயர்ன் செய்கையில்
இடையே தண்ணீர் பிடித்துக் கொள்கையில்
எப்போது அழுதும் கொள்கிறாள் என்று
தெரியவில்லை

காதலியை மனைவியாக்கி கழுத்தறுத்துக்
கொண்டிருக்கிறேன்....

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.