பெட்டிக் கடையில்
ஒரு ரூபாய் மீதிக்காய்,
கண்ணாடி ஜார் திறந்து
ஆரஞ்சு மிட்டாய் ஒன்றை
எடுத்துக் கொண்டது,
அதன் சுவை பிடிக்கும்
என்பதினும்,
அஞ்சு பைசாக்கு அதை
ஆசையோடு வாங்கி சாப்பிட்ட
பால்ய பருவத்தை அது
நினைவூட்டியதாலேயே
இருக்கக் கூடும்..!

- ஆதியோகி

More articles by ஆதியோகி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.