மழை நேர மாலைகளில்
எனக்கென நீ
கொண்டுவரும்
குடைகளில் தான்
எத்தனை நிறங்கள்..
நிறமற்ற நாட்களை
வானவில்லாக்கும்
வண்ணங்களை
விரல்கோர்த்து
வீதிகளில் தெளித்துச்
செல்வோம் வா
நிறமற்ற குடையுள்
நீயும் நானும்
மழையும்....

- அருணா சுப்ரமணியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.