அடிமை நிலையை ஒழித்துச் சுரண்டலின்
முடிவைக் கொணர மண்ணிற் கேற்ற
வழியே இயக்கப் பொருள்முதல் வாதம்
அழியாக் கருத்தைத் தெளிவாய்க் கூறும்
மார்க்சியம் தன்னைப் பார்ப்பனர்க் காக
நீர்க்கச் செய்து வறட்டுக் கருத்தை
ஏற்கச் சொல்லும் பொதுமைக் கட்சியே
நாற்புறம் நோக்கா அறிவிலி அல்லோம்
மண்ணின் பண்பை மறைத்து எதையும்
திண்மையாய்க் கூறலால் ஏற்றுக் கொள்ள
(அடிமைத்தனத்தை (முற்றிலும்) ஒழித்து, சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வர, அந்தந்த தேசத்தின் நிலைமைகளுக்கு ஏற்றபடி செயல்பட வேண்டும் என்று தான் பொருள் முதல் வாத மெய்ஞ்ஞானம் தெளிவாகக் கூறுகிறது. (ஆனால்) பார்ப்பனர்களின் சுரண்டல் கொள்ளை பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக, மார்க்சியத்தை நீர்க்கச் செய்து, வறட்டுக் கருத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லும் பொதுவுடைமைக் கட்சிகளே! மண்ணின் பண்பை மறைத்து (நீங்கள்) எதையும் உரக்கக் கூவிக் கூறுவதாலேயே அதைச் சரி என்று ஏற்றுக் கொள்ள (நாங்கள்) நான்கு பக்கமும் பார்க்காத அறிவிலிகள் அல்லோம்.
- இராமியா
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- 4 பேர் போலி மோதல் கொலை - பொதுமக்கள் கொண்டாடுவது ஏன்?
- நாடார் மகாநாடு
- பிதாவே மன்னிக்காதீர்
- அக்கினி சாட்சியாக அங்கத்தினர்!
- மோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா?
- குற்றமும் தண்டணையும்
- பொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்
- வெங்காயம்!
- தீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை
- புலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா
- விவரங்கள்
- எழுத்தாளர்: இராமியா
- பிரிவு: கவிதைகள்
புது நானூறு 208. அறிவிலி அல்லோம்
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.