perarivalan 300எண்ணுவதில் பயனில்லை -
வயதை
இழப்பை
கனவுகளை
விடியும் நாளை...

இருந்தும்
நொடிக்கொரு முறை
தனிமையில்
சேகரிக்கிறேன் இவைகளை...

குவியலான
விரக்தியை
தீயிடத் துணிகிறேன்
ஆற்றாமையில்...

பழையன கழியும்
போகியில்
எரிந்து தீர்கிறது
விடுதலைக் கனவு

விடியாத திருநாளுக்காய்
ஒப்பனை செய்கிறேன்-
கண்ணீர் கரைக்கிறது
இளமை அழகை

கம்பிகளுக்கு வெளியே
காத்திருக்கும் தாய் முன்
கதறலைp புதைத்து, முறுவலை சூடி
எதிர்ப்படுகிறேன் - அவளைப் போலவே,

உறக்கம் தொண்டை
தீண்டும் வரை
பேசித் தீர்க்கிறேன்
இருளின் வெளியில்

உயிர் நெறிக்கும் வலியாய்
கழிகிறது
வாழ்வின் ஒவ்வொரு நொடியும்
கால் நூற்றாண்டாய்...

- இரா.பகுத்தறிவு

More articles by இரா.பகுத்தறிவு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.