நள்ளிரவில் தட்டப்படும்
கதவுக்குப் பின்
கடவுளே நின்றாலும்
திறக்க
மறுக்கத்தான் செய்கிறது
தாழ்....
---
கொண்டாட்ட நாட்களில்
வீட்டில் முளைக்கின்றன
இன்னும் இரு ஜன்னல்கள்...
---
நீச்சல் தெரியாதவனின்
மரணம்
அச்சுறுத்துகிறது மீன்களை.....
---
நள்ளிரவில் கூடு
திரும்பும் பறவை
இரையோடு கொஞ்சம்
பகலையும்
கொண்டு வருகிறது....
---
கடலை வரைந்து
மழைக்குள்
கப்பல் ஆக்குகிறது....
மீன்கள் எப்படி
கண்ணாடிக் குடுவைக்குள்
என்று
யோசிக்கும் கிராமத்து
பால்யம்....
- கவிஜி