“அம்மா” என்ற தலைப்பில்
கவிதை எழுதினேன்
“ஓ! நீங்க அந்த கட்சியா?” என்றனர்
“அன்னை” என்று தலைப்பை
மாற்றினேன்
“அவங்க தான் இப்ப
ஆட்சியில் இல்லையே” என்றனர்

அன்னை
அம்மா - இந்த
இரு அழகிய வார்த்தைகளின்
அர்த்தத்தை
அழுக்காக்கி சிரிக்கின்றது அரசியல்!

Pin It