இறந்தவனின் புகைப்படம்
முன்னால் நீர்
வைக்கும் அதே இரவில்தான்
இன்னும் இறுக்கமாக
தாழிடப்படுகின்றன
கதவுகள்...
---
உடுக்கை அடித்து இழுத்து
வரப்பட்ட
இசையின் சாயலில்
கூட்டத்தோடு நின்று
வேடிக்கை பார்த்தார் கடவுள்...
---
எறும்பை எண்ணிக் கொண்டே
தலை கவிழ்ந்து கிடந்த
சோமாலியக்
குழந்தையின் எலும்பை
எண்ணிக் கொண்டிருந்தன
புகைப்படங்கள்...
---
மீண்டும் மீண்டும்
எழுதப்படுகின்றன
ஆள் மாறி படிக்கின்ற
உரியவரிடம் சேராத
கடிதம்....
---
இரவை உடைத்துக்
கொண்டு
உருண்ட நிலவை
அனாயசமாக
பிடித்து நெற்றியில்
அடைத்தவள்- என்
முதுகோரம்
தொலைத்தும் விட்டிருந்தாள்
விடியலில்...
- கவிஜி
RSS feed for comments to this post