உதறிக் கலைத்து
மாற்றி அடுக்கியதில்
இடம் மாறிய
மூன்றாம் வரிசையில்
இம்முறை எனக்குப் பிடித்த
கோணங்கியின் புத்தகம்...
முகம் திருப்பிக்
கொண்ட உன் சுஜாதாவின்
புத்தகத்தை,
ஐந்தாம் வரிசையில் கடைசியில்
ஒளிந்திருந்த
நகுலன் கவிதைகள்
அரவணைக்கிறது
மறதிகளின் அன்பாக...
பொய்க் கோபத்தோடு
உன் கைகள் தேடும்
வரிசையில் எனது
கைகளும் தேடுவது
கவிஜியின் கவிதைகளை
உன் கவிதைகள் களவாடிய
பொழுதுகளை...
- கவிஜி