man 258இடைவிடாமல்
இசைத்துக் கொண்டிருந்த
மனதின் தவளைகளை
தூக்கம் என்றொரு
நீண்ட பாம்பு,
மெல்ல மெல்ல
விழுங்கியது....

இப்போது,
இடைவிடாமல்
இசைத்துக் கொண்டிருப்பது
நெடுங்கனவின்
நாக்கின் விஷம்....

விஷம் பிடித்த
பாம்பின் கழுத்தை
தைத்துக் கொண்டே
தாவுகிறது
மனதிலிருந்து
எட்டிக் குதித்த
தவளைகள்....

- கவிஜி

Pin It