ஆறடி நிலத்திற்கு சண்டையிட்டார்கள்
கேட்டலும் மறுத்தலும் எதிரெதிரே நின்றது
வெகுதூரத்தில் புறம்போக்கு நிலம்
கொடுத்தது அந்த ஆறடியை
பல வருடங்களுக்குப் பிறகு
சண்டையிட்டவர்கள் நகரத்திற்கு குடிபெயர்ந்து
வரிசையில் நிற்கிறார்கள்
மின் மயானத்தில் எரிவதற்கு
மின்சாரம் மேல்சாதியென்பதற்காய்
மஞ்சள் தூளைத் தராது
சாம்பலைத்தான் தரும்
நெருப்பிடம் செல்லாது
சாதிப் பட்டமும் சான்றிதழும்.

Pin It