நித்தம் நித்தம் நினைக்கும் போதும்
நெஞ்சம் துடிக்கிறது -உன்
நிழற்படம் காணும் பொழு தெல்லாம்
நொறுங்கிப் போகிறது.
புறம் பாடித் திரிந்த தமிழனின்
புதல்வன் இன்று களத்தில்
விழுப்புண் தாங்கிக் கிடந்தது
வீரத்தின் விளைநிலமாம்.
கண்ணை மூடி துயில நினைத்தாலும்
கண்ணிமையில் உன்னுருவம் - வாழ்வின்
ஆயிரம் கனவுகள் தாண்டி
அந்த நிமிடம் என்ன நினைத்தாயோ
என் மகனைப் பார்க்கும் பொழுதெல்லாம்
உன் உருவம் தானே விரிகிறது - அவனை
வாரி யணைத்துக் கொள்கிறேன் ,
வக்கற்ற தமிழ்ப் பிள்ளை நான்.
ஆயிரமாயிரம் பிள்ளைகள் விதையாயினர்
அந்த நிலத்தில் நாதியற்று - ஆயினும்
உன் மரணத்தை மட்டும் ஏனோ
மனம் செரிக்க மறுக்கிறது.
விதையாய் வீழ்ந்தது என்றும்
வீணாய்ப் போகுமோ - நம்
இனம் அழித்தவனின் கொடி வீழும்
குலம் அழியுமிது சத்தியம்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் துப்பில்லாத திமுக அரசு
- அப்பட்டமாக வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் கோர முகம்! ஆர்எஸ்எஸ் பிஜேபியை விஞ்சிய தவெக!!
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- சித்தாவுக்கு முன்பாகவே இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்
- மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்
- துஷ்பிரயோகமெனும் துண்டித்தலும் ஊமையான ஒலிவாங்கிகளும்
- வடிவமற்ற சர்ப்பம்
- சத்தியமூர்த்தியின் தற்கால ஞானோதயம்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- விவரங்கள்
- வ.இரா.தமிழ் நேசன்
- பிரிவு: கவிதைகள்