உஷ்ணத்தால் எழுதப்பட்ட
கவிதையொன்று
பேரமைதி தவழும்
எனதறைக்குள் பரிசளித்துப் போகிறது
உன் நினைவுகளை

உன்னோடிருந்த ஒவ்வொரு நொடிகளையும்
நான் கவிதையாக்கிக் கொண்டிருக்கிறேன்

எழுத எழுத
நம்மிருவருக்குமான  நெருக்கங்கள்
விழுதாய் வேரூன்றிக் கொண்டிருக்கிறது என்னுள்

மலைபோல் குவிந்து கிடக்கும்
எனதெழுத்துக்களை
பத்திரமாய் பதப்படுத்தியிருக்கிறேன்
நீ வரும்போது
உன்னோடு உறவு கொள்ளெட்டுமென

- வழக்கறிஞர் நீதிமலர்

Comments

2 comments

2
saravanan
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க. சாதாரண வார்த்தைகளில் அழகாய் பூத்திருக்கிறது உங்களது கவிதை. வாழ்த்துக்கள்
venkatesawaran
அருமையாக பூத்திருக்கிரது மலரெ உன் கவிதை

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.