காதலிக்கத் தொடங்கும்போதே
வெளியேறி விட்டாள்.
கடுகளவு கூட தயக்கமில்லை.
வெளியேறி விட்டாளென்பதைக் கூட அறியவில்லை
கேட்கமுடியாது
கேட்டால்
உனக்குள் எப்போது வந்தேனென்பாள்
ஞாபகமறதிக்காரி
உதடுகள் வழியே
அவள் வெளியேறியிருக்க முடியாது
முத்தங்கள் உடலின்
மூடி வைத்த கதவுகளை
திறந்து விடுகின்றது என்பாள்
கண்களின் வெளிச்சத்தில்
வெளியேறியிருக்க முடியாது
உங்கள் கண்கள் கூர்மையாக
கவனிக்கிறதென்று சொல்லியிருக்கிறாள்.
எப்படி வெளியேறினாள் தெரியாது
எனக்கு முன்பு
நடந்து போய்க் கொண்டிருக்கிறாள்
எந்த ஒட்டுமில்லை
உறவுமில்லை யென்பதைப் போல
புதிதாக அவளைக் காதலிப்பவர்கள்
சொல்லக் கூடும்
அவள் தன் உடலில் நடந்து கொண்டிருப்பதாக.

- கோசின்ரா

Comments

3 comments

3
VeeNaSo.
Kavithai.Ethu Kavithai. Kavignar KOSINRA oru nalla kavignar.Vaazhththukkal.
Guru
மிக அருமையான சிந்தனை !!
bhanu
அற்புதம் வார்தைகள் வரவில்லை இதை படித்த பின்பு

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.