ஆசையும் மோகமும்
அளந்தளித்த வளங்கழிந்தபின்
அன்றாட ஆர்ப்பாட்டங்களிலும்
அலுவல்களின் கசகசப்பிலும்
லௌகீகக் கணக்குத் தீர்க்கும்
அவசரச் சிடுசிடுப்பிலும்
கொண்டாடியும் குறைசொல்லியும்
குதூகலித்த காதலை
பரிமாறிக் கொண்டே
மிச்சம் வைக்கும் கலையைக்
கைவிடக் கூடாதென்ற
தீர்மானம் கவனக் களைப்பால்
மறக்கடிக்கப்பட்டது
நினைப்பதற்கு மட்டுமே இருக்க வேண்டிய
நன்றியை நினைவு கூர்ந்தாற்போல
காதல் உயிர்ப்பைக்
கவனப்படுத்திய பொழுதின் முடிவில்
நிகழ்த்திப் பார்க்க
நினைத்த கணத்திலிருந்து
தொடங்கியது
நம்மை உணர்த்தி நாம் சுவைத்த
காதலின் மீள்வாசிப்பு.
மீள்வாசிப்பு
- விவரங்கள்
- துரைகுமரன்
- பிரிவு: கவிதைகள்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.