கோடை விடுமுறையில்
ஊருக்குச் சென்ற பொழுதில்..
தந்தையின்
அலமாரியில்
பத்திரிக்கைகள் பார்த்து
பலரின் இல்லத் திருமணங்களையும்
வீட்டு விழாக்களையும்
தெரிந்து கொள்ள
வேண்டியவனாய்..
தூரம் கருதி
சிலரும் ..
வரப் போகிறானா என்ன?
என்று சிலரும்
விட்டு விடுவதால்..
வேண்டியவர்கள்
வீட்டு நினைவுகளாய்
காலக் கண்ணாடிகளாய்..
என்னுள்
மிஞ்சிக் கிடக்கும்
அந்த
அழைப்பிதழ்கள்.
சொந்த ஊர்
செம்மண் பூமியோ
சரளைக்காடோ
தேசிய நெடுஞ்சாலை தவிர்த்த
தண்ணீர் வற்றிய
ஊர்க் காடுகள்..
இன்னும்
தவிப்புடன்
தங்களின்
கதையை சொல்கின்றன..
வளர்ச்சியின் குறியீடாய்த்
தேசிய நெடுஞ்சாலைகளில்
அரைக் கிலோமீட்டருக்கொரு
கல்லூரியாய்
கான்கிரீட் சொர்க்கங்களாய்
தொலைந்து போன
ஊர்களின் தனித்துவம்
சிறு சிறு கிராமங்களில்
சற்றே
மிஞ்சிக் கிடக்கின்றது
அங்குமிங்குமாய்..
தொடர்புடைய படைப்புகள்
காலக்கண்ணாடிகள்
- விவரங்கள்
- ரெ.கா.பாலமுருகன்
- பிரிவு: கவிதைகள்
More articles by ரெ.கா.பாலமுருகன்
- தங்க மீன்கள் - நெஞ்சம் நெகிழ ஒரு படம் (09 செப் 2013)
- தேவ பாஷையும், தேசக் கலாசாரமும் (25 ஜூலை 2013)
- கர்நாடக மாநிலத் தேர்தலும் மைனர் அம்பிகளின் கனவும்... (30 மே 2013)
- தெலுங்கானா - சில நெருடும் உண்மைகள் (29 டிச 2012)
- கர்நாடக மாநில இட ஒதுக்கீட்டு வரலாறு (10 செப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.