என் எலும்புகளை உடைத்து ஒரு வீடு கட்டிய பிறகு
அந்த வீட்டில் மகள்களின் மகள்களுக்கு தாலாட்டு பாடிய பிறகு
சாமானியர்கள் நுழையாத சரித்திரத்தில்
ஒரு நுழைவு வாயிலை அவர்களுக்காக திறந்துவிட்ட பிறகு
அணுகுண்டுகளும் வன்முறையும் புதைக்கப்பட்ட நிலத்திலிருந்து
மலரும் சமூகத்திற்கு வணக்கம் சொல்லிய பிறகு
நாடில்லாமல் அலையும் எல்லா இனங்களும்
ஒரு புதிய நாட்டில் குடியேறிய பிறகு
ஒரு நாள் நிச்சயம் சாவேன்.
ஆனால் வாழும் போதல்ல...
எப்போது சாவது?
More articles by கோசின்ரா
- உன் கொடூரத்தை எனக்கு மட்டும் பங்கிடு (22 ஆக 2015)
- ஒளிரும் வானம் (14 மே 2015)
- கண்களிலிருந்து விடுதலை செய்! (06 மே 2015)
- என் சாம்பலில் உன்னைத் தேடாதே (30 ஏப் 2015)
- முதல் முத்தம் (22 ஏப் 2015)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.