நான்கு கால்களிருப்பதால்
என் நாற்காலியும்
உனதும் ஒன்றல்ல.

உன் நாற்காலியின்
நான்கு கால்களிலிருந்து
வேர்பரவி
நாற்றிசையும் வியாபித்திருப்பதை
உலகறியும்.

கையிலிருந்து
நழுவும் பாதரசமாய்
என் நாற்காலியை
எனக்கு ஒட்டாமல்
உருட்ட
உன்னால் முடியும் என்பாய்.

சுட்டுவிரல் நீட்டி
என்னுடையதன்
நான்கு காலும் முறித்து
அந்தரத்தில் -
இருக்கை மட்டும்
ஆடவைத்து அச்சுறுத்துவாய்...

இருக்கை அடியில்
முள்ளோ, குண்டோ,
எனப் பூடகமாய்ப்
பார்வையால் வெருட்டுவாய்...

இருக்கை
எனக்கு கௌரவமன்று ..
உன்னை நினைத்தே
என் கவலை...
வேரோடியிருக்கும்
நாற்காலியின் கால்கள்
வேறொருவர் கால்களை
நோக்க நேர்கையில் ,
உன் இருப்பு.....?

- உமா மோகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.