கவிதை எழுதும் நேரத்தில் கவிதை குறித்து பேசுவோர்கள்
கவிதையின் ஆடை தொளதொளவென்றிருக்கிறது.
ஜீன்ஸை மாட்டிவிடு என்றார்கள்
கவிதை எழுதும் போது அவனைக் கொன்றுவிடனும்
முடிந்தால் இவனைக் கொன்றுவிடனும் என்றார்கள்.
கவிதைக்குள் உள்ளொளி வெளிச்சத்தின் தீற்றல் இருக்காது என்றார்கள்.
கவிதை ஆண்தன்மையும் பெண் தன்மையுமாயிருக்கிறது
ஏதாவது ஒரு குறியை செருகிவை என்றார்கள்
குறியீடு இல்லாத கவிதையையம் படிமமில்லாத சொற்களையும்
காக்கைக்குப் போட வேண்டுமென்றார்கள்
சிலர் வருத்தப்படக் கூடாதென்றார்கள்
ஆதலினால் என்னுடனே இருந்துவிடுகின்றன கவிதைகள்
ஏனெனில் கவிதை தன்னை எழுதச் சொல்லி
என்னிடம் கேட்டதில்லை.
நானும் கவிதையை வாழவைப்பதாய் வாக்குறுதி தரவில்லை
என் துயரங்களைச் சொல்லும் போதும்
கனவுகளைச் சொல்லும் போகும்
கவிதை குறுக்கே வந்து சந்திக்கிறது.
கவிதைக்கு என்னைத் தெரியும்
எனக்கு கவிதையைத் தெரியும்
அவ்வளவுதான் கவிதைக்கும் எனக்குமான உறவு
கவிதைக்கும் எனக்குமான உறவு
More articles by கோசின்ரா
- உன் கொடூரத்தை எனக்கு மட்டும் பங்கிடு (22 ஆக 2015)
- ஒளிரும் வானம் (14 மே 2015)
- கண்களிலிருந்து விடுதலை செய்! (06 மே 2015)
- என் சாம்பலில் உன்னைத் தேடாதே (30 ஏப் 2015)
- முதல் முத்தம் (22 ஏப் 2015)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.