அக்கொடிய விலங்கு
முன்பு ஒரு பறவையாகத்தானிருந்தது
 
அதன் சிறகுகள்
வெட்டப்படாத வரை
 
அதன் தானியங்கள்
திறந்திருந்தவரை 
 
அதன் முட்டைகள்
திருடப்படாத வரை
 
அதன் ஒரு விழியை
கவண் கல்லொன்று உதிர்க்காத வரை
 
அதன் கூடிருந்த கிளையில்
தீப்பிடிக்காதவரை
 
அதன் ஆகாயத்தின் நீலமும்
பூமியின் பசுமையும்
நிறம் மாற்றப்படாதவரை
 
கரிந்த மரமொன்றை
காணாதவரை
அதன் கனிகளில் ஒன்றை
ருசிக்காத வரை
 
முன்பு ஒரு பறவையாகத்தானிருந்தது
அக்கொடிய விலங்கு.

                        -  யுகயுகன்

Pin It