*
முன் தீர்மானங்களற்று சொல்வதற்கு
ஒரு சொல் கூட மிச்சமிருப்பதில்லை
காத்திருக்கும் தனிமையில்
எதிர்ப்படும் மௌனங்கள்
செதில் செதிலாக அசைக்கிறது
இவ்விரவை
புள்ளிகளாய்த் திரண்டு கோர்க்கும்
பனித்துளியொத்த தருணங்கள்
ஈரம் குளிரக் காத்திருக்கிறது
ஒரு சொல்லின் நீர்மையில்
எப்போதும்
மிதந்து கொண்டே இருக்கும்
சொல்லப்படாத அர்த்தங்கள்
மிச்சம் வைப்பதில்லை
வேறெந்த சொல்லையும்
******
--இளங்கோ (
சொல்லின் நீர்மைச் செதில்..
More articles by இளங்கோ
- கல்வி - வினவுவோம் (17 ஜூலை 2015)
- பறத்தலின் சிறகை அறிமுகப்படுத்தியவன் (25 ஏப் 2014)
- யாருமற்ற என் அறை.. (23 ஏப் 2014)
- தொட்டிச் செடி (02 ஜன 2014)
- நீர்மைப் பொழுதின் குரல் பூக்கள் (24 டிச 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.