கோடி முறை முயன்ற போதும்- எந்தன்
காதல் குறையுதில்லை போடீ
தேடித் தவித்ததுவா கொஞ்சம்-இந்தப்
பிறவி முழுவதுமா தேட?(கோடி)
காட்சி கனவிலொரு பாதி-அது
காண்கிறவர் அறிவ தில்லை
ஆட்சி அழகுவிழி செய்யும் உன்னைக்
காண வழியுதடி இன்பம் (கோடி)
யாரு முனக்கு இல்லை ஈடு...எனில்
யாவர்க்கும் நீயே அழகன்றோ...
வாரியணைக்கு மழை போலே-என்னை
தேடி நனைத்தவளும் நீயே....(கோடி)
பாதை வெறுத்தவிழி பாவம்-என்னை
நீயும் விலகிச் செல்லுவாயோ-
கோணல் நதியலையாய் நானும்
உந்தன் வாழ்வைத் தொடர்ந்து வருவேனே....(கோடி)
கோடி முறை முயன்ற போதும்....
- விவரங்கள்
- ஆத்மார்த்தி
- பிரிவு: கவிதைகள்
More articles by ஆத்மார்த்தி
- எழுத்துக்காரனுக்கு எப்போதாவது வாய்க்கும் இது போன்ற விழாக்கள் (18 ஆக 2014)
- ஐந்து (09 மே 2013)
- என்ன செய்யப் போகிறோம் மதுவை..? (03 ஏப் 2013)
- வதனம் அமைப்பின் நூல் விமர்சனக் கூட்டம் (15 மார் 2013)
- மகா கவனத்தின் விளைதல் பிழை (17 ஜன 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.