கோடி முறை முயன்ற போதும்- எந்தன்
காதல் குறையுதில்லை போடீ
தேடித் தவித்ததுவா கொஞ்சம்-இந்தப்
பிறவி முழுவதுமா தேட?(கோடி)

காட்சி கனவிலொரு பாதி-அது
காண்கிறவர் அறிவ தில்லை
ஆட்சி அழகுவிழி செய்யும் உன்னைக்
காண வழியுதடி இன்பம் (கோடி)

யாரு முனக்கு இல்லை ஈடு...எனில்
யாவர்க்கும் நீயே அழகன்றோ...
வாரியணைக்கு மழை போலே-என்னை
தேடி நனைத்தவளும் நீயே....(கோடி)

பாதை வெறுத்தவிழி பாவம்-என்னை
நீயும் விலகிச் செல்லுவாயோ-
கோணல் நதியலையாய்  நானும்
உந்தன் வாழ்வைத் தொடர்ந்து வருவேனே....(கோடி)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.